Monday, February 22, 2016

குரூப் பி, குரூப் சி பணி; விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்குகுரூப் பி மற்றும் குரூப் சி பணியாளர்களை ஸ்டாப் செலக் ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,) தேர்ந்தெடுக்க உள்ளது.

பட்டதாரி நிலை ஒருங்கிணைந்த தேர்வுக்கு (சி.ஜி.எல்.,) இணையதளம் மூலம் மார்ச்10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி.சார்பில் விஜிலென்ஸ்ரயில்வேவெளியுறவுநிதி உள்ளிட்ட துறைகளில் துணை அலுவலர்இன்ஸ்பெக்டர்ஆடிட்டர் பதவிகளுக்காக பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பதவிகளை பொறுத்து18 முதல்32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் ஆட்-கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணமாக100 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணம்வயது வரம்பில் எஸ்.சி., - எஸ்.டி., -ஓ.பி.சி.முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சலுகை உண்டு. விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.ssconline2.gov.in அல்லது http://sscregistration.nic.in.

No comments:

Post a Comment